#தஞ்சாவூர் || 10ம் வகுப்பு பொதுதேர்வு சரியாக எழுதவில்லை... மாணவி செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு தேர்வு சரியாக எழுதாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் யோகேஸ்வரி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 10ம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதியவர். அதனை சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார்.

 இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் தூக்கில் தூங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th grade student Committed Suicide In Pattukottai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->