தமிழகத்தில் இன்று (அக்டோபர் 10) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!
10.10.2022 TamilNadu Power cut places
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாமக்கல்
நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி
ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரல்வாய்மொழி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் அழகர் கோவில் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
10.10.2022 TamilNadu Power cut places