தாய் கண்முன்னே விபத்தில் பலியான மகன்..திருவள்ளூர் அருகே நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


லாரி சக்கரத்தில் சிக்கி தாய் கண் எதிரே 8-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் என்.எஸ்.கே.நகர் ராஜாதோப்பு பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி.  இவருக்கு திருமணமாகி பாலசூர்யா என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பாலமுருகன் தனது தாயுடன் உறவினர் வீட்டிற்கு பிறந்த நாள் விழாவிற்காக சென்றார். அப்போது, நெடுஞ்சாலையில் வல்லூர் நான்கு வழி சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது.

இதில், வாகனத்தில் இருந்து பாலசூர்யா கீழே விழுந்துள்ளார். இதனால்,லாரி சக்கரத்தில் சிக்கி தாய் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 Years old boy Death in Accident


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->