தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை உயிரிழப்பு. ,காவல்துறை விசாரணை..!
1-year-old child dies after drinking breast milk
தாய் பால் குடித்த 1 வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் கருப்பாயி கோவில் தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதனுஷா. இவருக்கு தருணிகா என்ற ஒரு வயது மகள் இருக்கிறாள்.இந்நிலையில், சம்பவதன்று குழந்தைக்கு வழக்கம் தாய்ப்பால் கொடுத்து தூங்கவைத்துள்ளார்.
இதனை அடுத்து, மதியம் குழந்தையை எழுப்பிய போது அதனிடம் இருந்து எந்த அசைவும் ஏற்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
1-year-old child dies after drinking breast milk