டோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக இவரால் செயல்பட முடியும்.. சுரேஷ் ரெய்னா தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை இந்த முறை யாரும் எடுக்கவில்லை. இதனால் ரெய்னா இந்த ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். 

இது குறித்து அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வர்ணனையாளர் பணிக்கு என்னை தயார்படுத்திக் கொள்ள உள்ளேன். எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன் சிங், பியுஸ் சாவ்லா ஆகியோர் ஏற்கனவே வர்ணனையாளராக உள்ளனர். 

இந்த சீசனில் ரவி சாஸ்திரியும் வர்ணனையாளர் குழுவில் இடம் பிடித்துள்ளார். எனவே இது எனக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தேவையான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, பிராவோ ஆகியோரால் அணியை வழிநடத்த முடியும்.  கேப்டன்ஷிப்புக்குரிய திறமை இவரிடம் உண்டு. ஆட்டத்தை நன்றாக புரிந்து செயல்படக்கூடியவர்கள். டோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ஜடேஜா வரமுடியும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

suresh raina press meet for csk captain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->