#IPL2022 : பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி.. ஹைதராபாத் அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 60 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், உம்ரன் மாலிக் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 41 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். 

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunrisers Hyderabad beat by 6 wickets Punjab kings


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->