இந்தியா-இலங்கை 3வது டி20 போட்டி.. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பேட்டிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


இந்தியா-இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதில், இன்று நடைபெறும் மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதில், இந்திய அணி வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்ய முனைப்பு காட்டும், அதேபோல் ஆறுதல் வெற்றியாவது பெற இலங்கை அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.

இலங்கை அணி வீரர்கள் :

 பதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்கா, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, தசுன் ஷனக, சாமிக்க கருணாரத்னே, துஷ்மந்த சமீர, ஜெஃப்ரி வான்டர்சே, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka won the toss choose bat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->