முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!! இரங்கல் தெரிவித்த சச்சின்!!
sachintendulkar Mourning to chandraseakar
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர்(வயது 57) தமிழகத்தை சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திரசேகர் தமிழ்நாடு அணி கேப்டனாக இருந்துள்ளார்.
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள இவர், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார், 1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் வி.பி. சந்திரசேகர் விளையாடியுள்ளார். தமிழக ரஞ்சி அணியின் பயிற்சியாளராக வி.பி. சந்திரசேகர் பதவி வகித்துள்ளார்.
இந்தநிலையில், வி.பி.சந்திரசேகர்க்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரழிந்தார்.
இதையடுத்து, வி.பி.சந்திரசேகர் மரணத்துக்கு சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
English Summary
sachintendulkar Mourning to chandraseakar