கொரோனாவில் இருந்து மீண்ட ரோகித் சர்மா.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, உள்ளூர் அணியுடன் இணைந்து கடந்த 23ஆம் தேதி பயிற்சி போட்டியில் விளையாடியது. அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதன் காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார். காரோண தொற்றால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், ரோகித் சர்மா கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்துள்ளார். நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேற்கொண்டுள்ள இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rohit sharma is recovered from corona


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->