ஸ்டீவ் ஸ்மித்தின் செயல்... விடியோவை ஆதாரமாக எடுத்து வைத்து செய்யும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.!
Rishabh Pant Line Erashed by Steve Smith
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் கடைசி நாள் ஆட்டமானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரஹானே ஆட்டமிழந்ததும், ரிஷப் களத்தில் இறங்கினார். துவக்கத்தில் அவர் திணறினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
பொதுவாக வீரர்கள் களமிறங்கியதும், மூன்று ஸ்டம்ப்களை மறைத்தவாறு சிறிது தூரத்தில் இருந்து விளையாடுவார்கள். சரியான இடத்தில நின்று விளையாட கிரீஸ் கார்டு எடுப்பார்கள். அந்த இடத்தை அடையாளம் வைத்துக்கொள்ள தரையில் சிறிய அடையாளத்தை ஏற்படுத்துவார்கள்.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் இடைவெளியின் போது ரிஷப் குளிர்பானம் அருந்த சென்று பின்னர் மீண்டும் மைதானத்திற்கு வந்தார். இதன்போது, ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், ரிஷப்பிற்கு முன்னதாகவே மைதானத்திற்கு வந்து கிரீஸ் கோட்டை கால்களால் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Rishabh Pant Line Erashed by Steve Smith