பாரா ஒலிம்பிக் : இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்! - Seithipunal
Seithipunal


இன்று 5வது நாளாக நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  உலகம் முழுவதிழும்  இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதங்கங்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், இன்று  எஸ்.எல் 4ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் சுஹாஸ் யதிராஜூம், பிரான்ஸின் லூகாஸூம் மோதினர். இந்த போட்டியில் 21 -9, 21 -13 என்ற நேர் செட்களில், லூகாஸ் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் பாராலிம்பிக்ஸ் பாட்மிண்டனில், சுஹாஸ் யதிராஜ் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் தற்போது இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களோடு, பதக்க பட்டியலில் 15வது இடத்திலுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Para Olympics Indian player Suhas Yathiraj wins silver medal and is amazing


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->