அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவேனா? தோனி வெளியிட்ட தகவல்.!!
next year ipl dhoni played or not
2019 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை தட்டி சென்றது .
இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி இரு அணிகளுமே பல தவறுகளை செய்த நிலையில் குறைந்த தவறுகளை செய்த மும்பை அணி வெற்றிப்பெற்றுள்ளதாகவும் ஓர் அணியாக இது சென்னைக்கு அணிக்கு நல்ல தொடராக அமைந்தது என்றும் கூறினார்.
மேலும் ஐபிஎல் தொடரில் செய்த தவறுகள் குறித்து ஆராய இது நேரமில்லை என பேசிய தோனி, அடுத்தகட்டமாக உலகக்கோப்பை தொடருக்கு செல்ல வேண்டி இருக்கிறது. தோனியின் ஓய்வு குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, விளையாடுவேன் என நம்பிக்கையிருப்பதாக தோனி கூறியது ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது
English Summary
next year ipl dhoni played or not