பெங்களூர் அணியிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்.!!
Maxwell not playing for RCB team
17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியும் ஹைதராபாத் அணியும் மோதியன. ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 287 ரன்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்தது. பெங்களூர் அணி 267ரன்கள் அடித்து வெற்றி வாய்ப்பை இழந்தது.
பெங்களூரு அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை பெற்று புள்ளி பட்டியல் 10வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் மூன்று முறை டாக்கோட் ஆகி பெங்களூர் அணிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார். நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை. இனி வரும் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில், எனக்கு மனரீதியாகும் உடல் உறுதியாகவும் சில பிரச்சனைகள் உள்ளது. அதனால் எனக்கு ஒரு ஓய்வு தேவைப்படுகிறது. எனக்கு பதிலாக வேறொரு பிளேயரை ஆட்டத்தில் சேர்க்கும் நேரம் இது என்றார். மேக்ஸ்வெலின் இந்த முடிவு பெங்களூர் அணியும் பெங்களூர் அணி ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Maxwell not playing for RCB team