மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை..ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐசிசி மாதம் தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மார்ச் மதத்திற்கான சிறந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெரெய்க் பிராத்வேயிட், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதேபோல் பெண்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன், லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானில் பாபர் அசாம் வென்றார். அதேபோல் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

March month best cricket players icc announced


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->