தோனி இப்படி செய்தால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு - கபில் தேவ்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டால், அது இந்திய கிரிக்கெட்டுக்குதான் பேரிழப்பு என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு அன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கபில் தேவ் தலமைலான இந்திய அணி முதலாவது உலக கோப்பையை வென்றது. இதை அடிப்படையாகக் வைத்து 83 என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற அப்போது டோனியின் ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கபில் தேவ், இந்திய கிரிக்கெட் அணிக்காகவும், நாட்டுக்காகவும் தோனி பல ஆண்டுகளாக சேவையாற்றி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அண்மை காலமாக தோனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய கபில்தேவ், ஓய்வு தொடர்பான அறிவிப்பை அவர் எப்போது வெளியிட்டாலும், அந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட்டுக்குதான் பேரிழப்பு என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kapil dev says about dhoni retirement


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->