தெறிக்கவிட்ட ஜடேஜா.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது நேற்றுடன் முடிவடைந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி கன மழையின் காரணமாக நேற்று நடைபெற்றது.

அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை -குஜராத் அணிகள் மோதிய இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் 96 ரன்கள் குவித்தார்.

அதனைத்தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

அதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போட்டி தடைப்பட்டது. இதனையடுத்து DLS விதிப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது.

பரபரப்பாக சென்ற இந்த இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த வகையில் மோகித் சர்மா வீசிய 5வது சிக்ஸர் விலாசிய ஜடேஜா, கடைசி பந்தை பவுண்டரி அடித்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 final CSK won by 5 wickets and champion


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->