ஜூனியர் ஆசிய கோப்பை: இறுதிப் போட்டியில் மோதவுள்ள இந்தியா -பாகிஸ்தான்..! - Seithipunal
Seithipunal


ஆண்களுக்கான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 08 அணிகள் பங்கேற்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 08 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிக 42 ரன்கள் எடுத்தார்.

139 என்ற வெறி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India and Pakistan will clash in the Junior Asia Cup final


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->