இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்.. வெற்றி பெற்றது யார்.? மழையால் நடந்த மாற்றம்.!!
ind vs sa 5th t20 match
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தொடரை 2 - 2 என்ற கணக்கில் இருந்தது. தொடரை கைப்பற்றும் அணி இது என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா காயம் அடைந்ததால் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி களமிறங்கி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தாமதமானது.

பின்னர் மழை நின்றதும் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது தொடங்கியது. அதன்பிறகு, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 3.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டதாக பிசிசி அறிவித்தது. இதையடுத்து, இந்தத் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.