குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கமே சிக்கல்.. முக்கிய வீரர் விலகல்.!! - Seithipunal
Seithipunal


15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன. 

10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.  ஐபிஎல் 2022 15-வது சீசனின் முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடக்கி மே 29 தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படெல் அறிவித்துள்ளார். 

இந்த முறை ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Group A-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும், Group B-யில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு குரூப்பில் இருக்கும் ஒவ்வொரு அணியும், எதிர் குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் 1 முறை விளையாடும். 1 அணி உடன் மட்டும் இரண்டு முறை விளையாயிடும். அதேபோல், அதே குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் 2 முறை விளையாடும். 

இந்நிலையில், ஐபிஎல் 2022-15 வது சீசனில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார். ஜேசன் ராய் தொடர்ந்து பயோ - பபுள் பாதுகாப்பில் இருந்ததால் சோர்வும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதால், அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Titans player Jason Roy withdraws from IPL 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->