தோனியின் அடுத்த கட்ட திட்டம்..! ரசிகர்கள் மகிழ்ச்சி.!!
dhoni next plan
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு என்ற அது உலக கோப்பை தான். இந்த போட்டியில் அரையிறுதி வரை தகுதி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததாகவும் இந்த தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
பல சிக்கலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது புள்ளிப் பட்டியலில் முதலிடம் அடையிறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொதப்பினார். பிறகு தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினார்கள்.
இருவரும் இலக்கை ஓரளவுக்கு எளியதாக மாற்றவேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தனர். இருந்தபோது இந்தியா தோல்வியடைந்தது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் இங்கிலாந்திலிருந்து டிக்கெட் கிடைப்பது அடிப்படையில் தாங்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல தொடங்குவார்கள் என்று ஐசிசி வட்டாரம் தெரிவிக்கிறது. ஒரு சில வீரர்கள் நாடு திரும்புவதாக ஒரு சில வீரர்கள் இங்கிலாந்தில் இருக்கப் போவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
தோனி ஓய்வு குறித்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில் ஒரு சில தினங்களுக்கு பிறகு தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.