இன்றைய (30-01-2022) ராசி பலன்கள்..எந்தேந்த ராசிக்காரர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். நன்மையான நாள்.

ரிஷபம்

தனவரவுக்கேற்ப விரயங்கள் உண்டாகும். மனதில் குழப்பமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் அவசியம் ஆகும். நிதானம் வேண்டிய நாள்.

மிதுனம்

எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வும், காலதாமதமும் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். இன்பமான நாள்.

கடகம்

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாக்குச்சாதுரியத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் அமையும். தனம் நிறைந்த நாள்.

சிம்மம்

புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கன்னி

ஆலய தரிசனம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருப்திகரமான நாள்.

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். புதிய முயற்சிகளில் மாற்றமான முடிவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கலகலப்பான செய்திகளும் கிடைக்கும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். மேன்மை நிறைந்த நாள்.

தனுசு

உத்தியோகம் தொடர்பான பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

மகரம்

பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

கும்பம்

தனவரவுகளின் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றிகரமான நாள்.

மீனம்

சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->