இன்றைய தினம் யாருக்கு வெற்றி.? யாருக்கு லாபம்.? இன்றைய (27-02-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.  உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். திருப்தியான நாள்.

ரிஷபம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும்.  திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.  ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

மிதுனம்

உடன்பிறந்தவர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் கவனம் வேண்டிய நாள்.

கடகம்

தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கனிவு நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழிலில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

கன்னி

நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். உத்தியோக பணிகளில் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான விஷயங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

துலாம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.  உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான சூழ்நிலைகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.  பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

தனுசு

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் புதிய முடிவுகளுக்கு ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.

மகரம்

சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் ஏற்படும். இனம் புரியாத பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

மீனம்

உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில்  இருந்துவந்த இழுபறிகள் குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->