நீங்கள் இந்த திதியா? இந்த திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்கள்.! - Seithipunal
Seithipunal


திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவு ஆகும். திதி பஞ்சாங்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். 

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில்தான் திதிகள் தோன்றுகின்றன.

அமாவாசை நாளையும், பூரணை(பௌர்ணமி) நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். 

அமாவாசையை அடுத்துவரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை என்றும், பூரணையை(பௌர்ணமி) அடுத்த பிரதமையை கிருஷ்ண பட்ச பிரதமை என்றும் அழைக்கின்றனர்.

இதுவரை நாம் ஒவ்வொரு திதியிலும் என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொண்டோம்.

இனி வரும் நாட்களில் நாம் பிறந்த திதிகளுக்கு ஏற்ப அவரவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரதமை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :

நன்றி மறவாதவர்கள்.

இரக்க குணம் கொண்டவர்கள்.

அறிவுக்கூர்மை உடையவர்கள்.

பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

பொறுமை உடையவர்கள்.

சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

கீர்த்தி உடையவர்கள்.

சுக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

அமைதியான குணநலன்கள் கொண்டவர்கள்.

எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள்.

எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருக்கக்கூடியவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reason for thithi 3


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->