திசாபுத்தி : மேஷ லக்னத்தில் சூரிய திசை நடந்தால் என்ன பலன்?! - Seithipunal
Seithipunal


திசாபுத்தி:

பிறப்பின் முதலே நவகிரகங்கள் நம் குணநலன்கள் மற்றும் பண்புகளை எப்படி கட்டுப்படுத்துகின்றதோ அதைப்போலவே நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் திசாபுத்தி மூலம் கட்டுப்படுத்துகின்றன.

அதாவது திசா என்பது ஒரு கிரகம் குறிப்பிட்ட காலம் வரை நம்மை கட்டுப்படுத்தும் காலம் ஆகும். 

அந்த குறிப்பிட்ட காலம் முழுவதும் ஒரு கிரகம் மட்டும் நம்மை ஆட்சி செய்வதில்லை. ஒரு கிரகத்தின் திசையில் அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நாட்கள் என அனைத்து கிரகங்களும் ஆள்கின்றன.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள காலம் பின்வருமாறு :

கேது திசை காலம் - 7 வருடம்
சுக்கிரன் திசை காலம் - 20 வருடம்
சூரியன் திசை காலம் - 6 வருடம்
சந்திரன் திசை காலம் - 10 வருடம்
செவ்வாய் திசை காலம் - 7 வருடம்
ராகு திசை காலம் - 18 வருடம்
குரு திசை காலம் - 16 வருடம்
சனி திசை காலம் - 19 வருடம்
புதன் திசை காலம் - 17 வருடம்
மொத்த திசை காலம் - 120 வருடங்கள்

வளம் தரும் திசாபுத்தி பலன்கள்:

திசாபுத்தி என்பது அனைவருக்கும் கேது திசையில் இருந்து ஆரம்பிக்காது. அவரவர் ஜென்ம நட்சத்திரங்களின் அடிப்படையில் திசையானது ஆரம்பிக்கும். ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் என ஒன்பது கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் பின்வருமாறு :

அஸ்வினி, மகம், மூலம் - கேது
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்
திருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்

மேஷ லக்னக்காரர்களுக்கு சூரிய திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்:

மேஷ லக்னத்தின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுக்கு சூரியன் நட்பு என்ற முறையிலும், மேஷத்தில் சூரியன் உச்சம் அடைகின்றார். சூரியன் உச்சம் பெற்று திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

அரசு தொடர்பான துறைகளில் ஈடுபடக்கூடியவர்கள்.

எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

பூர்வீக சொத்துக்களால் லாபம் அடையக்கூடியவர்கள்.

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

புத்திரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

மக்கள் தொடர்பான துறைகளில் கீர்த்தி உண்டாகும்.

சுயதொழிலில் எண்ணிய லாபம் உண்டாகும்.

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.

ஆன்மிக பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணிய எண்ணத்தை செயல்படுத்தக்கூடியவர்கள்.

பரிகாரம் :

அவரவர் ஜாதகத்தில் சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும், சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mesha laknathil disaputhi palan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->