இந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்..!!
macham palan 33
இறைவனின் படைப்புகளில் மிகப்பெரிய அற்புதமாக கருதப்படுவது மச்சங்கள். மனிதர்களின் குணங்களை காட்டுவது அவர்களின் உடம்பில் இருக்கும் மச்சங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் மச்சங்கள் ஒரு சிலருக்கு ராஜயோகங்களை கொடுக்கும். ஒரு சிலருக்கு போராட்டமான வாழ்க்கையை கொடுக்கும்.
மச்சங்கள் என்பது நமது தலையில் இருந்து கால் வரை இருக்கும் தோல் பாகத்தில் சிறு மற்றும் பெரும் கரும்புள்ளிகள் ஆகும். நாம் பிறக்கும்போது இருக்கும் மச்சம் சிறியதாகவும், பெரியதாகவும் ஒரு சிலருக்கு மேலும் பெரியதாகவும் இருக்கும்.
பிறக்கும் போதே மச்சங்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு திடீரென தோன்றுவதும் உண்டு. ஆனால் அவ்வாறு தோன்றுவது வெகு அரிதாகும். இந்த மச்சங்கள் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே நற்பலன்களையும், யோகங்களையும் கடைசி வரை கொடுக்கும்.
ஆண்களுக்கு தோள்களில் மச்சம் இருந்தால்...
பொதுவாக ஆண்களுக்கு தோள்களில் மச்சம் இருந்தால் நன்மையான பலன்களே நடைபெறும். இவர்கள் இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையும்.
ஆண்களுக்கு வலதுப்புற தோளில் மச்சம் இருந்தால் செய்யும் செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் செயல்படுவார்கள்.
இவர்கள் உலக விஷயங்களை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுடன் இருப்பார்கள். இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவார்கள்.
ஆண்களுக்கு இடதுப்புற தோளில் மச்சம் இருந்தால் சிறிய விஷயத்திற்கும் கூட பதற்றப்படுவார்கள். சிறிய விஷயங்களையும் பெரிய விஷயங்களாக கற்பனை செய்து கொண்டு கவலைப்படுவார்கள்.
பெண்களுக்கு தோள்களில் மச்சம் இருந்தால்...
பெண்களுக்கு வலதுப்புற தோளில் மச்சம் இருந்தால் நன்மையான பலன்கள் நடைபெறுவது குறைவு.
பெண்களுக்கு இடதுப்புற தோளில் மச்சம் இருந்தால் இவர்களுக்கு வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.