கரணன்... கரணம்... இரண்டிற்கும் வித்தியாசம் இருக்குங்க... தெரிஞ்சுக்கோங்க..!
karanan karanam difference
கரணன் காலம் :
அர்த்தப்பிரகரணன் என்பது நால்வர் காலங்களில் ஒருவரின் காலம் ஆகும்.
அர்த்தப்பிரகரணன் என்பது புதனின் துணைக்கோளாகும்.
அர்த்தப்பிரகரணன் காலத்தில் இறைவழிபாடு செய்வது நன்மையை அளிக்கும்.
அர்த்தப்பிரகரணன் காலத்தில் சுப காரியம் மேற்கொண்டால் எதிர்பார்த்த சுப பலன்கள் சற்று குறைவாக கிடைக்கும்.
அர்த்தப்பிரகரணன் காலம் ராகு, எமகண்ட காலத்தை போல் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட 1 1.2 மணி நேரம் இருக்கும்.
அர்த்தப்பிரகரணன் காலத்தை கரணன் காலம் என்றும் குறிப்பிடுவார்கள்.
கரணம் :
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது, 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும்.
கரணங்கள் மொத்தம் 11 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'கரணம் தப்பினால் மரணம்" என்று கூறுவார்கள்.
கரணத்தினை கொண்டு சில செயல்பாடுகளில் அவர்களின் குணாதிசயங்களை பற்றி அறிந்து கொள்ள இயலும்.
கரணத்தின் வகைகள் :
1. பவம்
2. பாலவம்
3. கௌலவம்
4. தைதிலம்
5. கரம்
6. வணிஜை
7. பத்ரம்
8. சகுனி
9. சதுஷ்பாதம்
10. நாகவம்
11. கிமுஸ்துக்னம்
English Summary
karanan karanam difference