இன்றைய தினப்பலன்கள்... முயற்சிகள் யாவும் கைகூடும் அற்புதமான நாள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். மதி நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். குழந்தைகளின் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.

ரிஷபம்:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பெண்களுக்கு உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மேல்நிலைக் கல்வியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

மிதுனம்:

மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சில புரிதல் உண்டாகும். விருப்பம் நிறைவேறும் நாள்.

கடகம்:

நண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மன நிறைவை கொடுக்கும். வங்கி கடன் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் அமையும். இன்னல் குறையும் நாள்.

கன்னி:

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். திருப்திகரமான நாள்.

துலாம்:

குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும்.  வர்த்தகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் ஈடேறும். ஆதரவு மேம்படும் நாள். 

தனுசு:

எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

மகரம்:

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.

கும்பம்:

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மீனம்:

மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.  வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

feb 17 rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->