விடுமுறை எதிரொலி -திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.!!
devotees croud increase in thirunallaru saneeswaran temple
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இதனால், சனிக்கிழமைகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த நிலையில், தற்போது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
சனீஸ்வர பகவானுக்கு இன்று காலை விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. சனிபகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானுக்கு உகந்த எள் தீபம் ஏற்றியும், அன்னதானம் செய்தும் வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அதிக அளவிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
devotees croud increase in thirunallaru saneeswaran temple