தினம் தினம் திருநாளே... இன்றைய ராசிபலன்.. எந்த ராசிக்கு பணவரவு உண்டாகும்?
apr 08 rasipalan
மேஷம்:
தன்னிச்சையாக எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். செய்யும் செயல்களில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும்.
ரிஷபம்:
பணி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான தன உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும்.
மிதுனம்:
இணையதளம் சார்ந்த துறையில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். விவாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
கடகம்:
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். முயற்சியால் சேமிப்புகள் உயரும். வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும்.
சிம்மம்:
தாய்வழி உறவுகளிடம் நிதானத்துடன் இருக்கவும். சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி:
மனதில் தைரியம் மற்றும் நிதானத்துடன் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது எச்சரிக்கை வேண்டும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.
துலாம்:
செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும்.
விருச்சகம்:
புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும் போது கவனமாக இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாவதங்களை தவிர்ப்பது நன்று. திட்டமிட்ட முயற்சிகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனதில் புதுமையான லட்சியங்களை உருவாக்குவீர்கள்.
தனுசு:
தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவதால் சாதகமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனைகளால் சுபவிரயம் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.
மகரம்:
இடையூறுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறைபணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். சொத்துச்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
கும்பம்:
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளிவட்டாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுப்புகள் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும்.
மீனம்:
பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். இறைவழிபாட்டால் மன அமைதி கிடைக்கும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.