தேய்பிறை அதிர்ஷ்டத்தை கொடுக்குமாம்... இதில் உங்க ராசி இருக்கா?!
4 zodiacs get luck for theypirai
தேய்பிறை அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நான்கு ராசிக்காரர்கள்:
பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும்.
பௌர்ணமிக்கு அடுத்து முதல் நாள் பிரதமை, 2-ம் நாள் துவிதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி மற்றும் சஷ்டி என சென்று அமாவாசையில் முடியும்.
இந்த காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறை திதிகள் என அழைக்கப்படும். இவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்களை பார்க்க உதவுகின்றன.
தேய்பிறை என்பது தேய வேண்டும். அதாவது நோய் விலக வேண்டும், தீர வேண்டும்.
கடன் வாங்குவது, கடன் அடைப்பதற்கு தேய்பிறை நல்லது. விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெறவும் தேய்பிறை நல்லது.
பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும்.
ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் தேய்பிறை காலம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த காலங்களில் செய்யும் எந்த காரியமும் இவர்களுக்கு வெற்றியைத் தரும்.
சந்திரன் தேய தேய இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாம். வளர்பிறை இவர்களுக்கு அவ்வளவாக கைக்கொடுக்காது.
நிச்சயம் செய்தல், குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், வீடு வாங்குதல், மேற்படிப்பு தொடங்குதல், மனை வாங்குதல் மற்றும் கிரகப்பிரவேசம் செய்தல் என எந்த காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியம் ஜெயமாகும்.
இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு தேய்பிறையில் திருமணம் செய்தால் அவர்களின் வாழ்வு சீரும், சிறப்புமாக அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஆகவே, இந்த நான்கு ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்க பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறையில் எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்கினாலும் நிச்சயம் வெற்றி இவர்களுக்குத்தான்.
English Summary
4 zodiacs get luck for theypirai