இன்றைய ராசிபலன்கள்.. இன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது? - Seithipunal
Seithipunal


மேஷம்:

குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆதாயம் ஏற்படும். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்:

பலதரப்பட்ட சிந்தனை மற்றும் ஒருவித மனச்சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன்  செயல்படவும். நெருக்கமானவர்களிடம் சந்தேக உணர்வுகளை குறைத்து கொள்ளவும். தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். சோர்வு நிறைந்த நாள்.

மிதுனம்:

தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள். 

கடகம்:

எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபார பணிகளில் கொடுக்கல்-வாங்கல் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வரவுகள் மேம்படும் நாள். 

சிம்மம்:

உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எழுத்து சார்ந்த துறைகளில் கற்பனை திறன் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். முன்னேற்றம் நிறைந்த நாள். 

கன்னி:

உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நட்பு வட்டாரங்களை விரிவுபடுத்துவீர்கள். குழப்பம் நீங்கும் நாள்.

துலாம்:

திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அரசு வழியில் அனுகூலமான பலன் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இனம்புரியாத புதிய தேடல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள். 

விருச்சிகம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புரிதல் உண்டாகும் நாள். 

தனுசு:

உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனை மேம்படும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். கவலைகள் குறையும் நாள்.

மகரம்:

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகள் சிலருக்கு கைகூடும். லாபகரமான நாள். 

கும்பம்:

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வெளியூர் வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். ஆதாயகரமான நாள்.

மீனம்:

எதிர்பார்த்திருந்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். இலக்குகளை நோக்கிய சிந்தனை பிறக்கும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் சிறு சிறு மாற்றம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 mar rasipalan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->