இன்றைய ராசிபலன்.. யாருக்கு உயர்வு? யாருக்கு மேன்மை? வாங்க பார்க்கலாம்..! - Seithipunal
Seithipunal


மேஷம்:

செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

ரிஷபம்:

அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

மிதுனம்:

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உண்டாகும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்:

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நன்மையான நாள்.

சிம்மம்:

வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தக பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

கன்னி:

நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் உள்ள மறைமுக போட்டிகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மேன்மையான நாள்.

துலாம்:

சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்:

விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் சேமிப்பு குறையும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

தனுசு:

புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.  இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். மதிப்பு நிறைந்த நாள்.

மகரம்:

புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் அகலும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்:

உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.

மீனம்:

குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மேன்மையான நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 apr rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->