தித்திக்கும் தீபாவளி திருநாளின் இன்றைய சிறப்பு (24-10-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

உத்தியோகம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். எதிர்பாராத உதவி சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

ரிஷபம்

உத்தியோக பணிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

மிதுனம்

அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு சார்ந்த துறைகளில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.

கன்னி

எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். தோற்றப்பொலிவை பற்றிய எண்ணங்கள் மேம்படும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், ஆர்வமின்மையும் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

துலாம்

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். முயற்சிகள் மேம்படும் நாள்.

விருச்சிகம்

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர் செல்வதற்கான முயற்சிகள் ஈடேறும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

தனுசு

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும். புதுவிதமான தேடல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகம் ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் மந்தத்தன்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கும்பம்

மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். எடுத்து செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் நிறைந்த நாள்.

மீனம்

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை ஏற்படும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24.10.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->