இன்றைய நாள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? - Seithipunal
Seithipunal


மேஷம்:

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் விருப்பம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

ரிஷபம்:

வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். மறைமுகமான தடைகளின் மூலம் எண்ணிய செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவுபெறும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த பதற்றம் குறையும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவினை எடுப்பீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

மிதுனம்:

விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்க்காத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். முயற்சிகள் நிறைந்த நாள்.

கடகம்:

பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  உத்தியோகம்  ரீதியான முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.

சிம்மம்:

பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பிடிவாத சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி:

ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான புரிதல் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். மேன்மை நிறைந்த நாள். 

துலாம்:

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பக்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வைத்தியம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

தனுசு:

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். கோபத்தை குறைத்து கொள்வதன் மூலம் உறவுகள் மேம்படும். ஆசைகள் அதிகரிக்கும் நாள்.

மகரம்:

பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் நன்றாக இருக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். பலவகையான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். புதுவிதமான ஆசைகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். ஆதரவு நிறைந்த நாள்.

கும்பம்:

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். பூமி விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். முக்கியமான ஆவணங்களை கவனத்துடன் கையாளவும். லாபம் நிறைந்த நாள்.

மீனம்:

மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். விலகி இருந்தவர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 july 2022 rasipalan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->