இந்த நாளை... இனிமையான நாளாக்கும் இன்றைய ராசி பலன்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும்.  உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். மேன்மையான நாள்.

ரிஷபம்:

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.

மிதுனம்:

குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் நிலவும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலை செய்யும் இடத்தில் உயர்வான சூழல் காணப்படும். பிள்ளைகளால் அலைச்சல்கள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சோர்வின்றி செயல்பட வேண்டிய நாள்.

கடகம்:

தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வாழ்க்கைத்துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனம் வேண்டும்.  வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை. எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். போட்டி நிறைந்த நாள்.

சிம்மம்:

எதிர்பாராத தனவரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.

கன்னி:

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். நட்பு மேம்படும் நாள்.

துலாம்:

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவு நிறைந்த நாள்.

தனுசு:

முடிவுகளில் நிதானம் வேண்டும். முன்கோபத்தால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும்.  உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். ஆதாயத்தில் கவனம் வேண்டிய நாள்.

மகரம்:

அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். சுபகாரிய முயற்சிகளில் எண்ணங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கவலைகள் நீங்கும் நாள்.

கும்பம்:

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறியான வேலைகள் நிறைவடையும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதை உறுத்திகொண்டு இருந்த சில பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள்.  தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். வெற்றி கிடைக்கும் நாள்.

மீனம்:

விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுகமான நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->