மார்கழி மாத முதல் நாள்.. உங்களுக்கான தினசரி ராசிபலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

ரிஷபம்:

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக முடியும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.

மிதுனம்:

திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான சில வெளியூர் பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விடாமுயற்சி வேண்டிய நாள்.

கடகம்:

எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். கணவன், மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மையான நாள்.

சிம்மம்:

பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.

கன்னி:

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இழுபறியான விஷயங்களுக்கு திடீரென முடிவு எடுப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்களின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பெருமை நிறைந்த நாள்.

துலாம்:

எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சுக்களை கடைபிடிக்கவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

விருச்சிகம்:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வங்கி சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு:

பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். அனுகூலமான நாள்.

மகரம்:

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்:

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.

மீனம்:

சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுபமான நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->