இன்றைய தினப்பலன்கள்... யாருக்கு என்ன பலன்? தெரிஞ்சுக்கலாம் வாங்க...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

நிர்வாகம் சார்ந்த பணிகளில் திறமைகள் வெளிப்படும். தோற்றத்தில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெறுவீர்கள். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு பெருகும். வெற்றிகரமான நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். வியாபார பணிகளில் செல்வாக்கு மேம்படும். உத்தியோகம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மைகள் நிறைந்த நாள்.

மிதுனம்:

உறவினர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்பாக அமையும். வியாபாரிகளுக்கு முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் செய்வது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுக உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். தயக்கம் நிறைந்த நாள்.

கடகம்:

மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். இலக்குகள் பிறக்கும் நாள்.

சிம்மம்:

வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். கற்பனை சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

கன்னி:

உறவினர்களால் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். சிந்தனைகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.  கனிவு வேண்டிய நாள்.

துலாம்:

பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில்  நிறைவேறும். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். நண்பர்களின் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

தனுசு:

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தனவரவுகள் சார்ந்த இழுபறிகள் குறையும். பிள்ளைகளின் செயல்பாடுகளில்  கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சுக்களில் நிதானம் வேண்டும். உடல்நலம் மேம்படும் நாள்.

மகரம்:

குழந்தைகள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் பயணங்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

கும்பம்:

மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி அடைவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சோர்வு நிறைந்த நாள்.

மீனம்:

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். விவசாயம் சார்ந்த பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->