இன்றைய தினப்பலன்... பரணி : வெற்றி | அஸ்தம் : லாபம் | சதயம் : மகிழ்ச்சி...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

புதிய முயற்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

ரிஷபம்:

மனை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பரிமாறுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்:

நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்துத் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வெற்றி நிறைந்த நாள். 

கடகம்:

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். முயற்சி நிறைந்த நாள்.

சிம்மம்:

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கு உண்டான பாராட்டுகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்து இருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

கன்னி:

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதன் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக அமையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். திருப்தி நிறைந்த நாள்.

துலாம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அலுவலக பணிகளில் மரியாதை அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைகள் அகலும் நாள்.

விருச்சிகம்:

புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியம். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோக பணிகளை மற்றவர்களிடம் நம்பி கொடுக்காமல் தாங்களே முடிப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சிக்கல் நிறைந்த நாள்.

தனுசு:

நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

மகரம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனை தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டும், ஒத்துழைப்பும் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

கும்பம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். வாழ்க்கை துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

மீனம்:

பெருந்தன்மையான செயல்களின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும், ஆதரவுகளையும் பெறுவீர்கள். மிருதுவான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

08 apr rasipalan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->