தினம் தினம் திருநாளே... இன்று உங்களுக்கு பாராட்டு கிடைக்கும் நாள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தெளிவும், தீர்வும் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

ரிஷபம்:

உடல்நிலையில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களிடம் கருத்துக்கள் பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கீர்த்தி உண்டாகும் நாள்.

மிதுனம்:

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதில் ஆர்வம் உண்டாகும். தொழில், வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சுபமான நாள்.

கடகம்:

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சகோதரர்களின் ஒத்துழைப்பு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வங்கி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

சிம்மம்:

குழந்தைகளால் மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். உறவினர்களில் உண்மையானவர்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

கன்னி:

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்வதால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இருந்துவந்த தேக்க நிலைகள் மாறும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

துலாம்:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரம் தொடர்பான சிறு தூரப் பயணங்கள் சாதகமாகும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

விருச்சிகம்:

தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

தனுசு:

உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவு பிறக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மகரம்:

அரசு சார்ந்த வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் சேமிப்புகள் உயரும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இறை வழிபாடு மனதில் தெளிவை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்:

கூட்டு வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

மீனம்:

பிடிவாத போக்கை மாற்றிக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சியில் ஈடுபாடு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->