இன்றைய நாள் இனிமையாக அமைய... தினசரி ராசிபலன்கள்..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்:

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உதவி கிடைக்கும் நாள்.

மிதுனம்:

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அறிமுகம் நிறைந்த நாள்.

கடகம்:

பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

சிம்மம்:

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.

கன்னி:

பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.  கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். புத்திக்கூர்மை வெளிப்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.

துலாம்:

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரங்களில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வெளியூர் தொடர்பான பயண முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

விருச்சிகம்:

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இனம் புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். செல்வாக்கு நிறைந்த நாள்.

தனுசு:

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.

மகரம்:

மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாக்குவன்மையின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். புதிய முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்:

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும்.  கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

மீனம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சலனம் நிறைந்த நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

05 mar rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->