அண்ணா நகர் ஸ்பா.. அவகிட்ட ஏதாச்சும் சர்வீஸ் கிடைக்கும்.. திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி மகனின் ஆபாச பதிவு வைரல்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகி இளங்கோவன் என்பவர் பெரியாரின் மார்பளவு சிலையை புதிதாக கட்டிய தனது வீட்டின் முன்பு நிறுவினார். இது குறித்து புகார் எரிந்ததால் வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

இளங்கோவன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு வருவாய் மற்றும் காவல் துறையினரிடம் விளக்கம் அளித்த நிலையில் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் பெரியாரின் மார்பளவு சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் உத்தரவிட்டனர்.

தந்தை பெரியார் சிலை அகற்றியது தொடர்பாக பிரபல பத்திரிக்கையாளர் தேவேந்திரன் பழனிச்சாமி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "வீட்டு காம்பவுண்டுக்குள்ளே வைத்த பெரியார் சிலையையே, அனுமதி இல்லன்னு தூக்கிட்டு போயிருக்காங்க... கேட்டா பெரியார் மண்ணும்பாங்க" என பதிவிட்டு இருந்தார். 

இந்த பதிவை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் என்று சொல்லப்படும் 'சாய் லட்சுமிகாந்த் பாரதி' என்ற டிவிட்டர் பக்கத்தில் "இப்பதான் அண்ணா நகர் ஸ்பால இருந்து வெளியே வந்தான் போல" என விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர் கருத்து தெரிவித்தவர்களையும் சாய் லட்சுமிகாந்த் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். 

இந்த நிலையில் சோனியா அருண்குமார் என்பவர் ஆர்.எஸ் பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்தின் பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். இந்த பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்குறிப்பிட்ட ஆர்.எஸ் பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் டிவிட்டர் பக்கம் உண்மை என்றே அவரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆர்.எஸ் பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பதிவுகளை பாரீர் என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK RS Bharati son sai Twitter screenshot has gone viral


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->