வேறு ஒரு ஆணுடன் பேசிய காதலி.. வாழைப்பழம் கொடுத்த காதலன்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
lover killed young girl
கும்பகோணம் அருகே நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் என்கிற இளம்பெண். தமிழ் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் ஐயப்பன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழ் ஐயப்பனிடம் பேசுவதைத் தவிர்த்து உள்ளார்.
தமிழ் வேறு ஒரு ஆணுடன் பேசிக் கொண்டிருப்பதாக அறிந்த ஐயப்பன், தமிழ் மீது பயங்கர கோபம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் இருந்த ஐயப்பனிடம், தமிழ் நான் அந்த நபருடன் நண்பராகத்தான் பழகி வருகிறேன். நீ நினைப்பதுபோல் ஒன்றும் இல்லை, சந்தேகப்படுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து ஐயப்பன் தானே வீட்டில் விடுவதாக கூறி தமிழை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நாம் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என தமிழை நம்பவைத்து எலி மருந்து வைத்த வாழைப்பழத்தை ஐயப்பன், தமிழிடம் கொடுத்துள்ளார். அவரும் நம்பி அதனை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் ஐயப்பன் வாழைப்பழத்தை சாப்பிடவில்லை.
இந்நிலையில் வீட்டிற்கு சென்ற தமிழ் நடந்ததை, தனது தந்தையிடம் கூறியுள்ளார் அவர் தமிழை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழை வாழைப்பழத்தில் விஷம் கொடுத்து கொன்ற ஐயப்பனை கைது செய்தனர்.