ஆய்வு செய்ய வேண்டிய நேரத்துல ரெஸ்ட் எடுக்கிறீங்களே...! - முதல்வர் ஸ்டாலினை நேருக்கு நேர் விமர்சித்த தமிழிசை...!
You taking rest when you should be conducting research Tamilisai who criticized Chief Minister Stalin face to face
தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் அரசியல் சூழ்நிலையை கடுமையாக சாடியுள்ளார்.“கோடை வெயிலின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் ஆட்சியின் உச்சியில் இருக்க வேண்டிய முதல்வர், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வில் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“வாக்களித்த மக்களோ தங்கள் அன்றாட உழைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்; ஆனால் துணை முதல்வர் வெளிநாட்டு பயணத்தில் இருப்பது ஆட்சியின் முன்னுரிமையை வெளிப்படுத்துகிறது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் என்பது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், “திமுகவின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை, அவர்களின் வளர்ச்சிக்காக அல்ல; வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே தெரிகிறது” எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், “மக்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்ய வேண்டிய நேரத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் ஓய்வைத் தேர்வு செய்வது வருத்தமளிக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தை நினைவூட்டும் வகையில், “ஒருகாலத்தில் அரசு பணிக்காக ஊட்டிக்கு சென்ற பெருந்தலைவர் காமராஜரை கேலி செய்தவர்கள் இதே அணியினர்; இன்று அவர்கள் செயலில் வெளிப்படும் முரண்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
“பொதுநலன் என்ற பெயரில் பேசிக்கொண்டு, சுயநல நோக்கங்களை முன்னிறுத்தும் அரசியல் நடைமுறைகளை மக்கள் தெளிவாக உணர வேண்டிய காலம் இது” என்று அவர் பதிவில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
You taking rest when you should be conducting research Tamilisai who criticized Chief Minister Stalin face to face