"ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் மம்தா": அமித் ஷாவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் பாஜக கொதிப்பு! - Seithipunal
Seithipunal



மேற்கு வங்கத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக மிரட்டியதாகக் கூறி பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மம்தா கூறியதாகக் கருதப்படும் 'சர்ச்சை' பேச்சு:
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அமித் ஷா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, 'நீங்கள் ஹோட்டலுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் நினைத்தால் உங்களால் அங்கிருந்து வெளியே வர முடியாது. நாங்கள் உங்களை அனுமதித்ததால் நீங்கள் அதிர்ஷ்டசாலி' என மம்தா பேசியுள்ளார். இது தனிப்பட்ட ஒருவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் அல்ல, நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கே விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்" என அவர் சாடினார்.

பாஜக முன்வைக்கும் விமர்சனங்கள்:
சர்வாதிகாரம்: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஹிட்லர் காலத்துச் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகப் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

வன்முறை அரசியல்: கடந்த காலங்களில் ஜே.பி. நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டதையும், சுமார் 300 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டிய சம்பித் பத்ரா, திரிணாமுல் காங்கிரஸின் குண்டர் ராஜ்யத்தால் 3,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனநாயகச் சரிவு: "நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்த மேற்கு வங்கம், இப்போது மம்தா பானர்ஜியால் அழிக்கப்பட்டு வருகிறது; அங்கு ஜனநாயகம் முற்றிலும் நசுக்கப்பட்டுவிட்டது" என அவர் கவலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wb BJP Mamata Banerjee Amit Shah


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->