தமிழ்நாட்டை அழித்த திராவிட கட்சிகள்...  தாமரை மலர்ந்தால் விருதுநகர் மலரும்.! - ராதிகா பிரசார பேச்சு! - Seithipunal
Seithipunal


நடிகை ராதிகா, தமிழ்நாட்டை 2 திராவிட கட்சிகள் அழித்துவிட்டதாகவும் விருதுநகரில் தாமரை மலர்ந்தால் விருதுநகரம் மலரும் என தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 

விருதுநகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை ராதிகா சரத்குமார் கடந்த சில நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

மேலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்று விருதுநகரில் தேர்தல் பிரசாரம் செய்த போது,

தாமரை மலர்ந்தால் விருதுநகரம் மலரும். தமிழ்நாட்டை இரண்டு திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து அழித்துவிட்டார்கள். 

என்னை உங்களது தங்கையாக தோழியாக நினைத்து வாக்களியுங்கள். என்னை வெற்றி பெற செய்தால் விருதுநகரை உயர்த்தி காட்டுவேன். 

நாளைய சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஓட்டுக்கள் என்பது விற்பனைக்கு அல்ல என்பதை திராவிட கட்சிகள் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Radhika campaign speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->