குழந்தை சுஜித் மரணம்.. ஆழ்துளை கிணறு விபத்தை தடுக்க விஜயகாந்த் கொடுத்த ஐடியா!! - Seithipunal
Seithipunal


ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்திற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

குழந்தை சுஜித் இறந்த நிலையில் மீட்ட செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன். எப்படியாவது குழந்தை சுஜித் மீட்கப்பட்டு விடுவான் என்று நம்பினேன், இறைவனை வேண்டினேன்.

உலகமே குழந்தை சுஜித்தை மீட்க பிரார்த்தனை செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இத்தகைய துயரச்செய்தி நம் அனைவருக்குமே அதிர்ச்சி அளிக்கிறது.

குழந்தை சுஜித்தை மீட்க பாடுபட்ட அனைவரின் முயற்சியும் பாராட்டத்தக்கது, இருப்பினும் குழந்தை சுஜித் உயிருடன் மீட்க முடியாமல் போனது, வேதனை அளிக்கிறது.

இத்துயரச்சம்பவத்தை பாடமாக கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உடனடியாக, திறந்த நிலையில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட வேண்டும்.

சுஜித்தை இழந்து வாடும் அவரது பெற்றோர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தை சுஜித் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth condolences for sujith


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->