விஜய் மக்கள் இயக்கம் தனித்துதான் போட்டி.. புஸ்ஸி ஆனந்த்.!! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி, ஆதரவின்றி விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுகிறது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் நடைபெறும் 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவின் படி, தளபதி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி, ஆதரவு இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. 

எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைத்து மாவட்ட தலைவர்களும், அணித் தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்த நற்பணிகள் மக்களிடத்தில் கொண்டு சேர்த்து, நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆதரவு தெரிவித்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay makkal iyakkam local body election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->