பிரசார களத்தில் இறங்கிய சுந்தர்.சி... இதுதான் காரணமா?
Vellore Sundar c campaign
பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென பிரசாத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடிகை குஷ்பூ பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு,
உடல்நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. மருத்துவர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என தெரிவித்ததால் கனத்த இதயத்துடன் பிரசாரத்தில் இருந்து விலகுவதாக கடிதம் ஒன்றை எழுதினார்.
மேலும் தனது எக்ஸ் வலைதளத்தின் மூலம் பா.ஜ.கவின் கொள்கைகளையும் திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குஷ்பூக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர் .சி பிரசார களத்தில் இறங்கியுள்ளார். கடந்து சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர் .சியின் பேச்சு பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Vellore Sundar c campaign