அதிமுகவுக்கு மேலும் ஒரு அமைப்பு ஆதரவு.‌. குஷியில் எடப்பாடி பழனிச்சாமி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்காக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்து வருகிறார். 

இவ்விரு கட்சிகளுக்கும் பல்வேறு அமைப்புகளும் சிறிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் வீரன் அழகு முத்துக்கோன் பேரவை எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் தங்கள் ஆதரவை அதிமுகவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

மேலும் வீரன் அழகுமுத்துக்கோன் பேரவையின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veeran azhagu muthukon peravai supports AIADMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->