மு.க ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார்! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மதிமுக சார்பில் வரும் செப்டம்பர் 15ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாநாடு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக விமான மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிஏஜி அறிக்கையை மேற்கோள் காட்டி மத்திய பாஜக அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் "தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார். தகுந்த ஆதாரம் இருப்பதால் தான் மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசி இருப்பார்" என பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko said MKStalin will not speak without evidence


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->